Search This Blog

29 October 2016

சிறுகதை

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது.   அம்மா வாத்து  முட்டையிட்டு ,   அடைகாத்து குஞ்சு பொறித்தது. 
          பிறந்த குஞ்சுகள் அடர்ந்த , பல வண்ணங்கள் கொண்ட முடியுடன்  அழகாவும், துருதுருப்பாகவும் இருந்தன.  ஆனால் அதில் ஒரு குஞ்சு மட்டும் அடர்த்தியும்,  அழகும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல  இல்லாமல் வித்தியாசமாக  ஒலித்தது.
            உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த  அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன் தாய்கூட அதை வெறுத்து ஒதுக்கியது. அதை மட்டும் ஒதுக்கிவிட்டு  மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
       அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
"நான் மட்டும் ஏன் இப்படி ஒரு அவலட்சணமா பிறந்தேன்? 
முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே" என்று அழுது கதறியது.
        நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும், நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு அசிங்கமாகக்  குச்சிகள் போல ஓரிரு  முடிகள்  வளர்ந்து அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று. தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.
            சில வேளைகளில் அன்பாய் சகோதரர்களையும் , அம்மாவையும் நெருங்கும்.  ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும்.
          இன்னும் கொஞ்ச நாள் சென்றது.  அசிங்கமாக  இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள் பிரகாசிக்கும் வெண்மை நிறமானது. தலையில் நீண்டிருந்த முடிகள் அழகான கொண்டையாக மாறிற்று.  இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன. அசிங்கமான வாத்துக்குஞ்சு இப்போது கண் கொள்ளா அழகுடன் காட்சியளித்தது. 
           அம்மா வாத்துக்கும் , மற்ற  சகோதர வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதன்  அருகில் நெருங்கக்கூட வெட்கப்பட்டன. நடந்தது  என்னவென்றால், ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டை இட்டுச் சென்றுவிட்டது. இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி  அடைகாத்து , குஞ்சு பொறித்து விட்டது. அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.
           ஒரு நாள் வந்தது.  அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றமளித்த  அன்னப்பறவையின் சிறகில்  ஒரு உந்துதல் தோன்றியது.  படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது.  கேலி செய்தவர்கள்,  வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம்  வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள அன்னப்பறவை கம்பீரமாய் உயரஉயரப் பறந்து  ஒரு புள்ளியாக மறைந்து போனது.

உலகம் உன்னை வேதனைப் படுத்தலாம். ஆண்டவரின் நிமித்தமாக அவமானப்  படுத்தலாம்.   ஆனாலும் நீயும், நானும் நம் கர்த்தரின் வருகையில் வெண்வஸ்திரம் தரித்தவர்களாய் பறந்து செல்லும்போது அவர்களெல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு  கதறத்தான்  போகிறார்கள்.

" ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் "
ரோமர் 8 :18

25 October 2016

Useful Abbreviation

*Useful Abbreviation*

1.) *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.

2.) *YAHOO* -
Yet Another Hierarchical Officious Oracle.

3.) *WINDOW* -
Wide Interactive Network Development for Office work Solution.

4.) *COMPUTER* - Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.

5.) *VIRUS* -
Vital Information Resources Under Siege.

6.) *UMTS* -
Universal Mobile Telecommunicati ons System.

7.) *AMOLED* -
Active-matrix organic light-emitting diode.

8.) *OLED* -
Organic light-emitting diode.

9.) *IMEI* -
International Mobile Equipment Identity.

10.) *ESN* -
Electronic Serial Number.

11.) *UPS* -
Uninterruptible power supply.

12. *HDMI* -
High-Definition Multimedia Interface.

13.) *VPN* -
Virtual private network.

14.) *APN* -
Access Point Name.

15.) *SIM* -
Subscriber Identity Module.

16.) *LED* -
Light emitting diode.

17.) *DLNA* -
Digital Living Network Alliance.

18.) *RAM* -
Random access memory.

19.) *ROM* -
Read only memory.

20.) *VGA* -
Video Graphics Array.

21.) *QVGA* -
Quarter Video Graphics Array.

22.) *WVGA* -
Wide video graphics array.

23.) *WXGA* -
Widescreen Extended Graphics Array.

24.) *USB* -
Universal serial Bus.

25.) *WLAN* -
Wireless Local Area Network.

26.) *PPI* -
Pixels Per Inch.

27.) *LCD* -
Liquid Crystal Display.

28.) *HSDPA* -
High speed down-link packet access.

29.) *HSUPA* -
High-Speed Uplink Packet Access.

30.) *HSPA* -
High Speed Packet Access.

31.) *GPRS* -
General Packet Radio Service.

32.) *EDGE* -
Enhanced Data Rates for Globa Evolution.

33.) *NFC* -
Near field communication.

34.) *OTG* -
On-the-go.

35.) *S-LCD* -
Super Liquid Crystal Display.

36.) *O.S* -
Operating system.

37.) *SNS* -
Social network service.

38.) *H.S* - HOTSPOT.

39.) *P.O.I* -
Point of interest.

40.) *GPS* -
Global Positioning System.

41.) *DVD* -
Digital Video Disk.

42.) *DTP* -
Desk top publishing.

43.) *DNSE* -
Digital natural sound engine.

44.) *OVI* -
Ohio Video Intranet.

45.) *CDMA* -
Code Division Multiple Access.

46.) *WCDMA* -
Wide-band Code Division Multiple Access.

47.) *GSM* -
Global System for Mobile Communications.

48.) *WI-FI* -
Wireless Fidelity.

49.) *DIVX* -
Digital internet video access.

50.) *APK* -
Authenticated public key.

51.) *J2ME* -
Java 2 micro edition.

52.) *SIS* -
Installation source.

53.) *DELL* -
Digital electronic link library.

54.) *ACER* -
Acquisition Collaboration Experimentation Reflection.

55.) *RSS* -
Really simple syndication.

56.) *TFT* -
Thin film transistor.

57.) *AMR*-
Adaptive Multi-Rate.

58.) *MPEG* -
moving pictures experts group.

59.) *IVRS* -
Interactive Voice Response System.

60.) *HP* - Hewlett Packard.

24 October 2016

வரதட்சணை

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின்
கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை
முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்
கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி
வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான்
நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ
நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்
இறைவன்.

இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்
வேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு
ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை
வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான்.

இறைவனும் அவனின் வேண்டுகோளை
நிறைவேற்றினான். உங்களது வேண்டுகோள்
என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்
வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.
சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்
கனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை
வைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது
பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள
வேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு
அதிர்ந்து போனான் அவன்.

பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே
என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை
கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்
தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று
கதறினான்.

" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்

உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்
வேண்டும் " உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்
ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது ?

நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை
பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில்
நியாயம் ?

"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்
பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது ".

Very useful

���� SOMETHING YOU
           MIGHT HAVE NOT
           KNOWN And NEED
           TO KNOW !!

��  Ants Problem:
       Ants hate Cucumbers.
       "KEEP the skin of
        Cucumbers near the
        Place where they are
        or at Ant Hole.  

��  To make the Mirror
        Shine:
        "Clean with Sprite"

  �� To remove Chewing
        Gum from Clothes:
        "Keep the Cloth in
        the Freezer for One
        Hour"

��   To Whiten White
        Clothes:
        "Soak White Clothes
        in hot water with a
        Slice of Lemon for 10
        Minutes"

��  To give a Shine to
        your Hair:
        "Add one Teaspoon
        of Vinegar to Hair,
        then wash Hair"

��  To get maximum
        Juice out of Lemons:
        "Soak Lemons in Hot
        Water for One Hour,
        and then juice them"

��  To avoid smell of
       Cabbage while
       cooking:
       "Keep a piece of
        Bread on the
        Cabbage in the
        Vessel while cooking"

��  To remove Ink from
       Clothes:
       "Put Toothpaste ��
       on the Ink Spots
       generously and let it
       dry completely, then
       wash"

��  To get rid of Mice or
       Rats:
       "Sprinkle Black
       Pepper in places
       where you find Mice &
       Rats. They will run
       away"

�� Take Water Before
       Bedtime..
       "About 90% of Heart
       Attacks occur Early in
       the Morning & it can
       be reduced if one
       takes a Glass or two
       of Water before going
       to bed at Night"

�� We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !!

       Did you  ???

�� Drinking Water at the
       Right Time ⏰
       Maximizes its
       effectiveness on the
       Human Body;

       1⃣  1 Glass of Water
              after waking up -
             ��⛅ helps to
              activate internal
              organs..

       2⃣  1 Glass of Water
              30 Minutes  ��
              before a Meal -
              helps digestion..

       3⃣ 1 Glass of Water
              before taking a
              Bath �� - helps
              lower your blood
              pressure.

       4⃣ 1 Glass of Water
              before going to
              Bed - �� avoids
              Stroke  or Heart
              Attack.

சிறு கதை

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்...

எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்..

21 October 2016

ஒழுக்கம்

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.
அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய்.

ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.