Search This Blog

19 December 2017

ஒன்பது

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
*9ன் சிறப்பு தெரியுமா?*
*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.* 

அந்த எண்ணில்  நீண்ட வாழ்வு எனும்  அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.  எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும்  9-ஆம் எண்ணை  விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில்,  மிக முக்கியமான  சடங்குகள் யாவும்  ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.

*தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்* பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! ஒன்பது எனும் எண்  இன்னும் மகத்துவங்கள்  கொண்டது.  ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம்  என்று பெயர். நவ என்ற சொல்  புதிய, புதுமை எனும்  பொருள் உடையது.

*நவ சக்திகள்:*
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

*நவ தீர்த்தங்கள்:*
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

*நவ வீரர்கள்:*
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

*நவ அபிஷேகங்கள்:*
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

*நவ ரசம்:*
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

*நவக்கிரகங்கள்:*
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

*நவமணிகள்:-*
*நவரத்தினங்கள்:*
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

*நவ திரவியங்கள்:*
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

*நவலோகம் (தாது):*
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

*நவ தானியங்கள்:*
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

*சிவ விரதங்கள் ஒன்பது:*
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

*நவசந்தி தாளங்கள்:*
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

*அடியார்களின் பண்புகள்:*
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

*(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்;* *நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)*
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

*அடியார்களின் நவகுணங்கள்:*
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

*நவ நிதிகள்:*
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

*நவ குண்டங்கள்:*
யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான  யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
7.பத்மம்,
8.எண்கோணம்,

*பிரதான விருத்தம்.*
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

*நவ பிரம்மாக்கள் :*
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

*நவக்கிரக தலங்கள் -*
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 
9,கீழ்ப்பெரும்பள்ளம்

*நவபாஷாணம் -*
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

*நவதுர்க்கா -*
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

*நவ சக்கரங்கள் -*
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

17 December 2017

ஆயகலைகள் அறுபத்து நான்கு

*ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!*

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

15 December 2017

மூட்டு வலிக்கு 5 ரூபாயில் ஓரு சிறந்த மருந்து .!

       நமது உடம்பில  நாளுக்கு நாள்  கொழுப்பு சத்து சேர்ந்து கிட்டுதான் இருக்கு. முறையா உடற்பயிற்ச்சி செய்யும் போது அது தானா குறையும் . அப்படி இல்லாமப்போகும் போது அது ரத்தத்தில சேர்ந்துகிட்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமா  சேரும் போதுதான் ஹார்ட் அட்டாக்  வரை போகும் ..ஆனா அதுல வர மிகக் குறைந்த அளவுதான் மூட்டு வலி . ஏன் அந்த இடங்களில் சில மெல்லிய ரத்தகுழாய்களில்  கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தை தடை செய்திடும்... ஆரம்ப காலத்தில  மறத்து போனமாதிரி தெரியும்  ..சிலருக்கு கால் கை உப்பிப்போகும்...உட்கார்ந்தே இருப்பாங்க 

      இந்த மூட்டு வலி சிலருக்கு மாச, ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .எத்தனையோ  டாக்டர் ( ஒரிஜினல் ) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை  குறைச்சி  பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் . அப்போதைக்கி சரியாகி  கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்.. நாமளும் பழைய டாக்டரை ( ஒரிஜினல் ) நல்லா திட்டிட்டு  வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம்  ..இது ஒரு தொடர் கதையாகி போகும்..  இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..இதே  வெளியே  வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம்.  சிலருக்கு அலைய முடியாமல் வேலையே  போகும் பரிதாப நிலையும் வரலாம் .

     இதை செலவே இல்லாமல் குணமாக்க  முடியும்..அதுவும்  வீட்டில்  இருக்கும் பொருளைக்கொண்டே  ..என்ன ஆச்சிரியமா இருக்கா... !!  இதுப்போல எத்தனையோ  பொருட்கள்  இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை  புரிவதில்லை.. என் கூட வேலை பார்க்கும் ஒருவரின் உறவினருக்கு இந்த பிரச்சனையால்  நடக்கவே சிரமப்பட்டார்.. அப்போது நான் சொன்னேன் .இது மாதிரி செய்யுங்க போதுமுன்னு..சந்தேகத்தோடவே போனார்  அடுத்த நாள்  பயங்கர சந்தோஷத்தோட வந்து சொன்னார்.. இது கடந்த மூனு வருஷமா இருக்கு ஆனா இன்னைக்கி காலையில எழுந்திருச்சதும் பார்த்தேன் . ரொம்ப நன்றி என் வாழ்க்கையில மூட்டு வலியே வந்ததில்லை போல உணர்ந்தேன் என்றார் நான் சொன்னேன் எப்பவாவது திரும்ப வருவது மாதிரி இருந்தா இதை திரும்பவும் செய்யுங்க போதுமுன்னேன்  ...

       விஷயம் இதுதான்  வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல்  எடுத்து அதை கத்தியால்  சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு  தூங்கப்போகும் போது  அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில  அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..

       காரணம்  இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் . ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில்  தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே  இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஐந்து ரூபாய்  வருமா..? 

அடுத்த தடவை யாருக்காவது  மூட்டு வலி மாதிரி இருந்தால் , தெரிந்தால்  டக்டரிடம் போவதுக்கு முன்  இதை செய்யுங்கள்.. தெரியாத வருக்கும் தெரியப்படுத்துங்கள்.!  காலத்தே தரப்படும் சில அனுபவ மருந்துகள் விலைமதிப்பில்லாதது.!

13 December 2017

என்றும் கவலையில்லை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

 "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
  அவனுடையது தான். .

"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
     கொடுத்து வாங்க பலரும் தயாராக
     இருந்தனர். ஆனால் இவன்
     விற்கவில்லை.  

 "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே
     எரிந்துகொண்டிருந்தது. 

 "ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
     பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தீ
     முழுவதுமாக பரவிவிட்டதால் அதை
     அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று
     எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

 "வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்
     நீரோடு புலம்பிகொண்டிருந்தான். 

 "ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று
     அலறினான்.

 "அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து
    ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே
    ஏன் அழுகிறீர்கள் ? 

"இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
     மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
     கூறினான். 

 "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 

 "அவனது சோகம் அனைத்தும் மறைந்து
     மகிழ்ச்சி உண்டானது. 

" இப்போது வணிகனும் கூடி இருந்த
     கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை
     பார்க்க தொடங்கினான். 

 " அதே வீடு தான் " ,

 " அதே நெருப்பு தான் " ,

 "ஆனால் சில வினாடிகளுக்கு முன்
    இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
    அவனிடம் இல்லை.

"" சிறிது நேரத்தில் வணிகனின்
    இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
    ஏன் இப்படி கவலையில்லாமல்
    சிரிக்கிறீர்கள்?  நாங்கள் விற்ற இந்த
    வீட்டிற்கு முன்பணம் மட்டுமே
    வாங்கியுள்ளோம்.  முழு தொகை இன்னும்
    வரவில்லை. 

 "வீட்டை வாங்கியவன் இப்போது மீதி
    பணத்தை தருவானா என்பது சந்தேகமே”
    என்றான். .

 "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
    அடைந்தான். மீண்டும் சோகத்தில்
    ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப
    ஆரம்பித்தான். 

 "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம்
    மீண்டும் அவனை வாட்டியது.

 "சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
    மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
    “தந்தையே கவலை வேண்டாம். இந்த
    வீட்டை வாங்கிய மனிதன் மிகவும்
    நல்லவன் போலும். 

 "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
    செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று
    உங்களுக்கும் தெரியாது எனக்கும்
    தெரியாது. 

 "ஆகையால் நான் பேசியபடி முழு
     தொகையை கொடுப்பது தான் நியாயம்
     என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
     அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
     தெரிவித்தான்.

 "இதை கேட்ட வணிகனுக்கோ ஏக
     சந்தோஷம். 

 "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
    மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
    மீண்டும் காணாமல் போய்விட்டது. 

 "மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று
    வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

 " இங்கு எதுவுமே மாறவில்லை " ,

 " அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

 " இது என்னுடையது என்று நினைக்கும்
    போது அந்த இழப்பு உங்களை சோகத்தில்
   ஆழ்த்துகிறது. 

 " இது என்னுடையது அல்ல என்று
    நினைக்கும் போது உங்களை சோகம்
    தாக்குவது இல்லை. .

 " நான், என்னுடையது, எனக்கு
     சொந்தமானது என்ற எண்ணம் தான்
     பற்று. 

 "உலகில் எதுவுமே நிரந்தரமானது
     இல்லை. 

 " ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
    இல்லை. அனைத்துமே அழிய கூடியது. 

 "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட
    காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது
    வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது
    என்பதை நாம் நினைவில் நிறுத்தினால்
    என்றும் கவலையில்லை..
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...!!

11 December 2017

தோல்வி என்றால்...என்ன ?

*தோல்வி* என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.
 
*தோல்வி* என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. சில பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள்.

*தோல்வி* என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.

*தோல்வி* என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை. மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பொருள்.

*தோல்வி* என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.

*தோல்வி* என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல அடைய கொஞ்சம் காலம் தாமதமாகலாம் என்று பொருள்.

*தோல்வி* என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை. உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறார் என்று பொருள்..

அக மற்றும் முக மலர்ச்சியோடும், நம்பிக்கையோடும்  நமது எதிர்கால பணியை துவக்குங்கள்! துவக்குவோம்!

09 December 2017

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

07 December 2017

Real Brain Blasters

🇮🇳 Tricky Questions and equally witty Answers given by Candidates. ( Many of them are IAS Officers now)

❓Q. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
✅A. Concrete floors are very hard to crack! (UPSC Topper)
---------------------------
❓Q. If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
✅A. No time at all its already built. (UPSC 23 rd Rank Opted for IFS)
---------------------------
❓QHow many birthdays does the average Japanese woman have?
✅A. Just one. All the others are anniversaries.
---------------------------
❓Q. If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
✅A. Very large hands. (UPSC 11 Rank Opted for IPS)
---------------------------
❓Q. How can you lift an elephant with one hand?
✅A.. It is not a problem, since you will never find an elephant with one hand. . (UPSC Rank 14 Opted for IES)
---------------------------
❓Q. How can a man go eight days without sleep?
✅A. He sleeps at night. . (UPSC IAS Rank 98)
---------------------------
❓Q. Why it is impossible to send a telegram to Washington today ?
✅A.. Because he is dead.
---------------------------
❓Q. If you throw a blue stone into the red sea what will it become ?
✅A. It becomes wet. (UPSC IAS Rank 2)
---------------------------
❓Q. What often falls but never gets hurt ?
✅A. Rain
---------------------------
❓Q. What is that no man ever saw which never was but always will be?
✅A. TOMORROW
---------------------------
❓Q.What looks like half apple?
✅A. The other half. (UPSC - IAS Topper)
---------------------------
❓Q. What can you never eat at breakfast?
✅A. Dinner.
---------------------------
❓Q. What gets wet while drying?
✅A. A towel.
---------------------------
❓Q. What 3 letters change a girl into a woman ?
✅A. AGE.
---------------------------
❓Q. What happened when wheel was invented ?
✅A. It caused a revolution.
---------------------------
❓Q. How is it easy to weigh a fish?
✅A. Because it has its own scales.
---------------------------
❓Q. Why does a bike rest on its leg?       
 ✅A. Because it is too tyred.
---------------------------
❓Q. Bay of Bengal is in which state?
✅A. liquid (UPSC 33Rank)
-----------🇮🇳--------

05 December 2017

ஆப்பிள்

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...
 
apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.

03 December 2017

பஞ்ச பூதங்கள்

நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை  பார்க்கலாம்.

உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]  

பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. [வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி இல்லாதபோது சாப்பிடுவது தான்] அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்.

நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். உணவில் ஆறு சுவைகள் [ இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் ] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும். நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சாப்பிடும்பொழுது உதட்டை மூடி, உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி. 

முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி . குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.

பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது [ கவனம் சிதறாமல் இருப்பதற்காக ]. கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் ஏப்பம் வந்த உடனோ அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு. 

நீர் [நீர்] [சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

தண்ணீரைக் கொதிக்க வைத்தோ அல்லது நீரை வடிகட்டியோ குடிபதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுகாக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்க்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம். தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும். மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தக் கூடாது. அப்படி குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [ பிரெஷ் ஜூஸ் ] போன்றவற்றை பருகலாம்.  தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் தேவைக்கு அதிகமாகவே குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்து சப்பி குடிக்க வேண்டும். 

நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.  பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.  நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள் ஏற்படும்.

ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [ கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும். வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும். தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும். புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
 
இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும். குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும்.
 
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும்.  தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
 
நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும். இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

புகைபழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [ நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க ] வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.

தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ]  மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாடிக்கொள்ளுங்கள்.
 
சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும்.  சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. 

உழைப்பு [நெருப்பு] [இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]

பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும். தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.
 
காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.
 
எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை.

01 December 2017

Welcome December

Season of joy🙆🏼
Season of happiness🙂
Season of ice❄☃
Season of relief💁🏻
Season of kings birth🤴🏼
Season has started let's enjoy this Christmas🙅🏼🙆🏼 season with happiness🙃.
Happy December😄💞