Search This Blog

29 March 2020

ஊரடங்கு

ஞாயிறு
விடிந்தால்
இந்தியாவில்
ஊரடங்கு

ஒருநாள்
மட்டும்
வீட்டில்
அடங்கு

எங்கிருந்தோ
வருகிறது
கொடிய
கிருமி

பரப்பி
விடாதே
நீ
இருமி

வாழத்தான்
பிறந்தோம்
மண்ணில்

அலட்சியம்
வேண்டாம்
உன்னில்

உன்
உயிர்
காக்க
துடிக்கிறது
எத்தனையோ
துறை

நீ
மட்டும்
சொல்லி
திரியலாமா
ஊரெல்வாம்
குறை

விரலால்
கூட
பிறரை
தொடாதே

வீம்பாக
இருந்தால்
நோய்
உன்னை
விடாதே

கண்
காது
மூக்கு
ஐம்புலன்

விரலால்
தொடாமல்
இருப்பதே
பெரும்பலன் 

கிருமிகள்
இருக்கும்
கண்ணுக்கு
தெரியாமல்

இருக்க
வேண்டாம்
அது
மட்டும்
புரியாமல்

கழுவுவோம்
சோப்பினால்
கையை

காத்திடுவோம்
நோயின்றி
மெய்யை

காற்றில்
தண்ணீரில்
பரவாது

தொட்டால்
விரல்
பட்டால்
பரவும்

உலகம்
முழுவதும்
எத்தனையோ
பலி

நமக்குள்
இருக்கட்டும்
ஒரு
மீட்டர்
இடைவெளி

கிருமியை
விரட்டும்
எண்ணம்
மனதில்
கொண்டு

அடங்கு
அடங்கு
வீட்டில்

நன்றாய்
வாழலாம்
நாட்டில்

இது
நம்
உயிர்
காக்கும்
யுத்தம்

இப்போதைய
முழு
முதல்
தேவை
தன்சுத்தம்

இனிமை
தரட்டும்
தனிமை

தாய்
நாட்டுக்கு
கிடைக்கும்
பெருமை
______________________

No comments:

Post a Comment